Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 6, Verse 5

உத்34ரேதா3த்1மனாத்1மானம் நாத்1மானமவஸாத3யேத்1 |

ஆத்1மைவ ஹ்யாத்1மனோ ப3ன்து4ராத்1மைவ ரிபு1ராத்1மன: ||5||

உத்தரேத்---—உயர்த்துங்கள்; ஆத்மனா—--மனதின் மூலம்; ஆத்மானம்----சுயத்தை; ந---இல்லை; ஆத்மானம்--— தானாக அவஸாதயேத்—--இழிவு படுத்துங்கள்; ஆத்மா--—மனம்; ஏவ--—நிச்சயமாக; ஹி--—உண்மையில்; ஆத்மனஹ--—தன்னுடைய; பந்துஹு--—நண்பர்; ஆத்மா—--மனம்; ஏவ--—நிச்சயமாக; ரிபுஹு—--எதிரி; ஆத்மனஹ----சுயத்தின்

Translation

BG 6.5: உங்கள் மனதின் சக்தியால் உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள், உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள், ஏனென்றால் மனம் சுயத்தின் நண்பனாகவும் மற்றும் எதிரியாகவும் இருக்கலாம்.

Commentary

நமது உயர்வு அல்லது தாழ்வுக்கு நாமே பொறுப்பு. நமக்காக இறைவனை உணரும் பாதையை யாரும் கடந்து செல்ல முடியாது. துறவிகள் மற்றும் ஞான ஆசிரியர்கள் நமக்கு வழி காட்டுகிறார்கள், ஆனால் நாம் அதை நாமே பயணிக்க வேண்டும். இந்தியில் ஒரு பழமொழி உள்ளது: ஏக்1 பே1ட3 தோ31க்ஷி பைடே2 ஏக்1 கு3ரு ஏக்1 சே1லா1, அப1நீ க1ரநீ கு3ரு உத1ரே, அப1நீ க1ரநீ சே1லா 'ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் அமர்ந்துள்ளன-ஒன்று குரு மற்றொன்று சீடன். குரு தன் சொந்த வேலையால் இறங்குவார், மற்றும் சீடனும் தன் சொந்த கர்மங்களால் மட்டுமே கீழே இறங்க முடியும்.

இதற்கு முன் நாம் எண்ணற்ற ஆயுட்காலங்களை அனுபவித்திருக்கிறோம், மேலும் கடவுளை உணர்ந்த புனிதர்கள் எப்போதும் பூமியில் இருந்திருக்கிறார்கள். எந்தக் காலகட்டத்திலும், இவ்வுலகில் அத்தகைய மஹான்கள் இல்லாதிருந்தால், அந்தக் காலகட்டத்தின் ஆன்மாக்கள் கடவுளை உணர்ந்து இருந்திருக்க முடியாது. அப்படியானால், மனித வாழ்வின் நோக்கமான இறையறிவை எப்படி நிறைவேற்ற முடியும்? இந்த காரணத்திற்காக, கடவுள்-உணர்ந்த புனிதர்கள் எப்போதும் உண்மையாக தேடுபவர்களுக்கு வழிகாட்டவும், மனிதகுலத்தை ஊக்குவிக்கவும் இருப்பதை கடவுள் உறுதி செய்கிறார். எனவே, எல்லையற்ற கடந்தகால வாழ்நாளில், நாமும் பலமுறை கடவுள்-உணர்ந்த மகான்களை சந்தித்திருக்க வேண்டும், ஆனால் நாம் கடவுளை உணரவில்லை. இதன் பொருள், சரியான வழிகாட்டுதல் இல்லாதது பிரச்சனை அல்ல, ஆனால் உண்மையான பிரச்சனை அதனுடன் ஒத்துப்போகும் படி வேலை செய்வது அல்லது அதை ஏற்றுக் கொள்வதில் உள்ள நமது தயக்கம். நாம் முன்னேறுவதற்கு முன், நமது தற்போதைய ஆன்மீக நிலை அல்லது அதன் பற்றாக்குறைக்கான பொறுப்பை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் நம்மை தற்போதைய நிலைக்கு கொண்டு வந்து இருப்பதை உணர்ந்து நமது சொந்த முயற்சியால் நம்மை நாமே உயர்த்திக் கொள்ள முடியும்.

ஆன்மிக வளர்ச்சியின் பாதையில் தலைகீழ் திருப்பம் நிகழும்போது, மற்றவர்களின் மீது​​பொருப்பேற்றி, அவர்கள் நமது எதிரிகள் என்று குறை கூறுகிறோம். இருப்பினும், முழுமைக்கான நமது அபிலாஷையை முறியடிப்பது நமக்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கும் எதிரி நமது சொந்த மனம்தான். ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார், ஒருபுறம், ஆன்மாவின் மிகப்பெரிய நற்பண்பாளராக, மனம் நமக்கு அதிக பலனைத் தரும் ஆற்றலைக் கொண்டுள்ளது; மறுபுறம், நமது மிகப்பெரிய எதிரியாக, அதிகபட்ச தீங்கு விளைவிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட மனம் நம்மை பெரிய உயரத்திற்கு உயர்த்தும், அதேசமயம் கட்டுப்பாடற்ற மனம் மிகவும் இழிவான எண்ணங்களால் நம் நனவை சிதைத்துவிடும்.

நம் மனதை நண்பனாகப் பயன்படுத்த, அதன் இயல்பைப் புரிந்துகொள்வது அவசியம். நமது மனம் நான்கு நிலைகளில் இயங்குகிறது:

மனம்: இது எண்ணங்கள், உணர்வுகள், ஆசைகள், வெறுப்புகளை உருவாக்குகிறது.

புத்3தி 4 : அதன் செயல்பாடு பகுப்பாய்வு செய்து முடிவெடுப்பதாகும். இது புரிந்துகொள்கிறது, தீர்மானிக்கிறது மற்றும் வேறுபடுத்துகிறது, அதாவது, இது நல்லது, இது கெட்டது.

ஆழ் மனது: இது பதிவுகள் மற்றும் நினைவுகளின் களஞ்சியமாகும். இது ஒரு பொருள் அல்லது நபருடன் இணைக்கப்படுவதற்கு உதவுகிறது.

 தன் முனைப்பு (அஹங்காரம்):. இது உடலின் பண்புகளுடன் அடையாள உணர்வை உருவாக்கி பெருமையை உருவாக்குகம் அகங்காரம் அல்லது 'நான்'.

இவை நான்கு தனித்தனி உருபொருள்கள் அல்ல. அவை ஒரே மனதின் நான்கு நிலைகள் மட்டுமே. எனவே, நாம் அனைத்தையும் ஒன்றாக மனம், அல்லது மனம்-புத்தி, அல்லது மனம்-புத்தி-அஹங்காரம் அல்லது மனம்-புத்தி-ஆழ்நிலை-அஹங்காரம் என்று குறிப்பிடலாம். அவை அனைத்தும் ஒரே பொருளைக் குறிக்கின்றன.

இங்கே 'ஈகோ' என்ற வார்த்தையின் பயன்பாடு ஃப்ராய்டியன் உளவியலில் அர்த்தத்திலிருந்து வேறுபட்டது. ஆஸ்திரிய நரம்பியல் நிபுணரான சிக்மண்ட் ஃப்ராய்ட், மனம் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்த உளவியலின் முதல் கோட்பாட்டை முன்வைத்தார். அவரது கூற்றுப்படி, ‘அகங்காரம்’ என்பது 'உண்மையான சுயம்' ஆகும், இது நமது அடக்கப்படாத ஆசைகளுக்கும் (இட்) குழந்தைப் பருவத்தில் கற்றுக் கொள்ளும் மதிப்பு அமைப்புக்கும் (மேல் மனம்) இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கிறது.

பல்வேறு ஶாஸ்திரங்கள் இந்த நான்கு வழிகளில் ஒன்றில் மனதை விவரிக்கின்றன, அங்கு வழங்கப்பட்ட கருத்துக்களை விளக்குகின்றன. அவை அனைத்தும் நமக்குள் இருக்கும் அதே உள் கருவியைக் குறிக்கின்றன, அது ஒன்றாக அந்தஹ கரண் அல்லது மனம் என்று அழைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு:

- பஞ்சதஶீ நான்கையும் ஒன்றாக மனம் என்று குறிப்பிடுகிறது, மேலும் அதுவே பொருள் பந்தத்திற்கு காரணம் என்று கூறுகிறது.

- பகவத் கீதையில், ஸ்ரீ கிருஷ்ணர் மனதையும் புத்தியையும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள் என்று திரும்பத் திரும்பப் பேசி, இரண்டையும் கடவுளிடம் சரணடையச் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

- யோக தரிஶனம், இயற்கையின் பல்வேறு கூறுகளை பகுப்பாய்வு செய்யும் போது, ​​மூன்று உருபொருள்களைப் பற்றி பேசுகிறது: மனம், புத்தி மற்றும் அஹங்காரம்.

- சங்கராச்சாரியார், ஆன்மாவுக்குக் கிடைக்கும் நுட்பமான உபகரணங்களை விளக்குகையில், மனதை மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம் என நான்காக வகைப்படுத்துகிறார்.

எனவே, சுயத்தை உயர்த்துவதற்கு மனதை பயன்படுத்த வேண்டும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறும்போது, ​​தாழ்ந்த மனதை உயர்த்துவதற்கு உயர்ந்த மனதைப் பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனதைக் கட்டுப்படுத்த புத்தியைப் பயன்படுத்த வேண்டும். இதைச் செய்வதற்கான செயல்முறை வசனங்கள் 2.41-44 மற்றும் மீண்டும் வசனம் 3.43 இல் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
6. த்யான யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!